சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
5.098
திருநாவுக்கரசர்
தேவாரம்
நீறு அலைத்தது ஓர் மேனி, பண் - திருக்குறுந்தொகை (பொது -உள்ளத் திருக்குறுந்தொகை ) Audio: https://www.youtube.com/watch?v=mbZXQYi281U |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
5.098  
நீறு அலைத்தது ஓர் மேனி,
பண் - திருக்குறுந்தொகை (திருத்தலம் பொது -உள்ளத் திருக்குறுந்தொகை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நீறு அலைத்தது ஓர் மேனி, நிமிர்சடை ஆறு அலைக்க நின்று ஆடும், அமுதினை; தேறலை; தெளியை; தெளி வாய்த்தது ஓர் ஊறலை; கண்டுகொண்டது-என் உள்ளமே. | [1] |
பொந்தையைப் புக்கு நீக்கப் புகுந்திடும் தந்தையை, தழல் போல்வது ஓர் மேனியை, சிந்தையை, தெளிவை, தெளி வாய்த்தது ஓர் எந்தையை, கண்டுகொண்டது-என் உள்ளமே. | [2] |
வெள்ளத்தார் விஞ்சையார்கள் விரும்பவே வெள்ளத்தைச் சடை வைத்த விகிர்தனார், கள்ளத்தைக் கழிய(ம்) மனம் ஒன்றி நின்று உள்ளத்தில், ஒளியைக் கண்டது-என் உள்ளமே. | [3] |
அம்மானை,- அமுதின் அமுதே! என்று- தம்மானை, தத்துவத்து அடியார் தொழும் செம் மான(ந்) நிறம் போல்வது ஓர் சிந்தையுள் எம்மானை, கண்டுகொண்டது, என் உள்ளமே. | [4] |
கூறு ஏறும்(ம்) உமை பாகம் ஓர் பாலராய், ஆறு ஏறும் சடைமேல் பிறை சூடுவர், பாறு ஏறும் தலை ஏந்திப் பல இலம் ஏறு ஏறும் எந்தையைக் கண்டது-என் உள்ளமே. | [5] |
முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார், தம் நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்; வன் நெஞ்சம்(ம்) அது நீங்குதல் வல்லிரே? என் நெஞ்சில் ஈசனைக் கண்டது-என் உள்ளமே. | [6] |
வென்றானை, புலன் ஐந்தும்; என் தீவினை கொன்றானை; குணத்தாலே வணங்கிட நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம் ஒன்றானை; கண்டுகொண்டது-என் உள்ளமே. | [7] |
மருவினை, மட நெஞ்சம்! மனம் புகும் குருவினை, குணத்தாலே வணங்கிடும் திருவினை, சிந்தையுள் சிவனாய் நின்ற உருவனை, கண்டுகொண்டது-என் உள்ளமே. | [8] |
தேசனை, திருமால் பிரமன் செயும் பூசனை, புணரில் புணர்வு ஆயது ஓர் நேசனை, நெஞ்சினுள் நிறைவு ஆய் நின்ற ஈசனை, கண்டுகொண்டது-என் உள்ளமே. | [9] |
வெறுத்தான், ஐம்புலனும்; பிரமன் தலை அறுத்தானை; அரக்கன் கயிலாயத்தைக் கறுத்தானைக் காலினில் விரல் ஒன்றினால் ஒறுத்தானை; கண்டுகொண்டது-என் உள்ளமே. | [10] |