சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
5.098   திருநாவுக்கரசர்   தேவாரம்   நீறு அலைத்தது ஓர் மேனி,
பண் - திருக்குறுந்தொகை   (பொது -உள்ளத் திருக்குறுந்தொகை )
Audio: https://www.youtube.com/watch?v=mbZXQYi281U

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.098   நீறு அலைத்தது ஓர் மேனி,  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் பொது -உள்ளத் திருக்குறுந்தொகை ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
நீறு அலைத்தது ஓர் மேனி, நிமிர்சடை
ஆறு அலைக்க நின்று ஆடும், அமுதினை;
தேறலை; தெளியை; தெளி வாய்த்தது ஓர்
ஊறலை; கண்டுகொண்டது-என் உள்ளமே.

[1]
பொந்தையைப் புக்கு நீக்கப் புகுந்திடும்
தந்தையை, தழல் போல்வது ஓர் மேனியை,
சிந்தையை, தெளிவை, தெளி வாய்த்தது ஓர்
எந்தையை, கண்டுகொண்டது-என் உள்ளமே.

[2]
வெள்ளத்தார் விஞ்சையார்கள் விரும்பவே
வெள்ளத்தைச் சடை வைத்த விகிர்தனார்,
கள்ளத்தைக் கழிய(ம்) மனம் ஒன்றி நின்று
உள்ளத்தில், ஒளியைக் கண்டது-என் உள்ளமே.

[3]
அம்மானை,- அமுதின் அமுதே! என்று-
தம்மானை, தத்துவத்து அடியார் தொழும்
செம் மான(ந்) நிறம் போல்வது ஓர் சிந்தையுள்
எம்மானை, கண்டுகொண்டது, என் உள்ளமே.

[4]
கூறு ஏறும்(ம்) உமை பாகம் ஓர் பாலராய்,
ஆறு ஏறும் சடைமேல் பிறை சூடுவர்,
பாறு ஏறும் தலை ஏந்திப் பல இலம்
ஏறு ஏறும் எந்தையைக் கண்டது-என் உள்ளமே.

[5]
முன் நெஞ்சம் இன்றி மூர்க்கராய்ச் சாகின்றார்,
தம் நெஞ்சம் தமக்குத் தாம் இலாதவர்;
வன் நெஞ்சம்(ம்) அது நீங்குதல் வல்லிரே?
என் நெஞ்சில் ஈசனைக் கண்டது-என் உள்ளமே.

[6]
வென்றானை, புலன் ஐந்தும்; என் தீவினை
கொன்றானை; குணத்தாலே வணங்கிட
நன்றா நல் மனம் வைத்திடும் ஞானம் ஆம்
ஒன்றானை; கண்டுகொண்டது-என் உள்ளமே.

[7]
மருவினை, மட நெஞ்சம்! மனம் புகும்
குருவினை, குணத்தாலே வணங்கிடும்
திருவினை, சிந்தையுள் சிவனாய் நின்ற
உருவனை, கண்டுகொண்டது-என் உள்ளமே.

[8]
தேசனை, திருமால் பிரமன் செயும்
பூசனை, புணரில் புணர்வு ஆயது ஓர்
நேசனை, நெஞ்சினுள் நிறைவு ஆய் நின்ற
ஈசனை, கண்டுகொண்டது-என் உள்ளமே.

[9]
வெறுத்தான், ஐம்புலனும்; பிரமன் தலை
அறுத்தானை; அரக்கன் கயிலாயத்தைக்
கறுத்தானைக் காலினில் விரல் ஒன்றினால்
ஒறுத்தானை; கண்டுகொண்டது-என் உள்ளமே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list